பண்ருட்டி நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு யோகா பயிற்சி நகர் மன்ற தலைவர். க. ராஜேந்திரன் பங்கேற்பு!!
கடலூர் மாவட்டம்,சர்வதேச உலக யோகா தினத்தை முன்னிட்டு இன்று 21.06.25 பண்ருட்டி நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நகர மன்ற தலைவரும்,நகர திமுக செயலாளருமான க,ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் யோகா பயிற்சி மற்றும் மன வலிமை பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் நடத்தப்பட்டது. விழாவில் நகராட்சி துப்புரவு அலுவலர். கிருஷ்ணராஜ், துப்புரவு ஆய்வாளர் சந்திரகுமார் உட்பட நகராட்சி அதிகாரிகள் நகராட்சி, துப்புரவு மேற்பார்வையாளர்கள் மற்றும் மனவள பயிற்சி மையத்தை சார்ந்த ஆசிரியர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.



கருத்துகள்
கருத்துரையிடுக