பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் வாகன ஓட்டிகளுக்கு திருக்குறள் புத்தகம் மற்றும் குளிர்பானம் வழங்கி சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர் பிரச்சாரம்!!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார். ஐ.பி.எஸ் அவர்களின் உத்தரவின் பேரில் பண்ருட்டி போக்குவரத்து காவல் ஆய்வாளர். பரமேஷ்வர பத்மநாபன் மற்றும் போலீசார் பண்ருட்டி நகரத்தினை விபத்தில்லா நகரமாக மாற்றிடவும் சாலை பாதுகாப்பு பற்றியும் தலைகவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து
பண்ருட்டி நான்கு முனை சந்திப்பு சாலையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியும் தலைகவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஒட்டி வந்த ஓட்டுநர்களுக்கு உலக பொதுமறை திருக்குறள் புத்தகம் மற்றும் குளிர்பானம் வழங்கி ஊக்கப்படுத்தியும் தன் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களையும் தலைகவசம் அணிய செய்வோம் என உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.



கருத்துகள்
கருத்துரையிடுக