அரவக்குறிச்சி அருகே சின்ன தாராபுரத்தில் புதிய கால்நடை மருந்தகத்தை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி!!
கரூர் மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், இன்று கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி, சின்னதாராபுரத்தில், புதிதாக கட்டப்பட்டுள்ள கால்நடை மருந்தகத்தை முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான. செந்தில் பாலாஜி அவர்கள் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் கரூர் மாவட்ட ஆட்சியர்.மீ.தங்கவேல் இ.ஆ.ப., மாண்புமிகு அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர். இளங்கோ, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.



கருத்துகள்
கருத்துரையிடுக