கடலூர் ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற அஷ்ட பந்தனம் மகா கும்பாபிஷேகம்!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் ஆலய அஷ்டபந்தனம் மகா கும்பாபிஷேகம் இன்று 8.6.2025 தேதி நடைபெற்றது. கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .S. ஜெயக்குமார் IPS, கடலூர் சட்டமன்ற உறுப்பினர் . கோ. ஐயப்பன், கடலூர் மாநகராட்சி மேயர் . சுந்தரிராஜா, கடலூர் மாநகராட்சி துணை மேயர் திரு. பா. தாமரைச்செல்வன் ஆகியோர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள். காவல்துறை அதிகாரிகள் காவல் குடும்பத்தார்கள் கும்பாபிஷேகத்தில் பங்கேற்று சிறப்பித்தார்கள்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக