செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்த பகுஜன் சமாஜ் கட்சி கரூர் மாவட்ட துணை தலைவர். ரவிக்குமார்!!
கரூர் மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் தலைமையே தேவை என்றுணர்ந்து, கரூர் கிழக்கு ஒன்றியம் அரங்கநாதன் பேட்டை அதிமுக கிளை கழகத்தில் இருந்து, கிளை செயலாளர். ஜி.மோகன்ராஜ், திமுக மகளிர் அணியை சார்ந்த சபிதா மற்றும் புஷ்பா, வேடிச்சிபாளையத்திலிருந்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட துணை தலைவர். ரவிக்குமார், மறவபாளையம் அதிமுகவில் இருந்து குணா மற்றும் சிவா, நெரூர் அக்ரகாரம் பகுதி அதிமுகவை சார்ந்த முருகேசன், பூபதி மற்றும் கமலம், நெரூர் தென்பாகம் MGR நகர் அதிமுக கிளை கழகத்திலிருந்து மகளிர் அணியைச் சார்ந்த இந்திரா, மேரி, கௌசல்யா, ஹேமலதா, மற்றும். பாரதி ஆகியோர். முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக கழக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் முன்னிலையில் இன்று தங்களை திமுக கழகத்தில் இணைத்துக்கொண்டனர்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.


கருத்துகள்
கருத்துரையிடுக