ஈரோடு அருகே சென்னிமலை ஊராட்சியில் தார் சாலை அமைத்தல் மற்றும் புதுப்பித்தல் ஆகிய இரண்டு சாலை பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்.மு.பெ.சாமிநாதன்!!
ஈரோடு மாவட்டம், காங்கேயம் சட்டமன்ற தொகுதி, சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், புஞ்சை பாலதொழுவு ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் தார் சாலை அமைத்தல் மற்றும் புதுப்பித்தல் ஆகிய இரண்டு சாலை பணிகளுக்கு தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் செய்தி விளம்பரத் துறை அமைச்சர்.மு.பெ. சாமிநாதன் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
உடன் ஈரோடு மாவட்ட கூடுதல் ஆட்சியர். (வளர்ச்சி) / திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரனஅர்பித் ஜெயின் இ.ஆ.ப., அவர்கள், திருப்பூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர். .இல.பத்மநாபன் அவர்கள், திமுக கழக நிர்வாகிகள். மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.



கருத்துகள்
கருத்துரையிடுக