சென்னை பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பால பூங்காவை மேம்படுத்துவது தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்களுடன் நடைபெற்ற கலந்தா லோசனை கூட்டம் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு .க. ஸ்டாலின் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி இன்று (5.6.2025) சென்னை, எழும்பூர், தாளமுத்து நடராஜன் மாளிகையில் உள்ள சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும அலுவலகக் கூட்டரங்கில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தலைமையில் பெரம்பூர், முரசொலி மாறன் மேம்பாலப் பூங்காவை மேம்படுத்துவது தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும முதன்மை செயல் அலுவலர். அ.சிவஞானம், இ.ஆ.ப., தலைமைத் திட்ட அமைப்பாளர்கள் .எஸ்.ருத்ரமூர்த்தி, அ.பாலசுப்ரமணியன், .ந.ரவிக்குமார், தலைமைப் பொறியாளர்கள். (மாநகராட்சி) .ராஜேஷ்வரி, (சி.எம்.டி.ஏ.) .ப.மகாவிஷ்ணு, மாவட்ட வருவாய் அலுவலர்/தலைமை நிர்வாக அலுவலர்.மு.இந்துமதி, கண்காணிப்புப் பொறியாளர்கள் (மாநகராட்சி) .ஏ.எஸ்.முருகன், (சி.எம்.டி.ஏ.) .மா.பாலமுருகன், 6வது மண்டல அலுவலர்.சரவணன், செயற்பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!