திருச்சியில் காவேரி மருத்துவமனையில் புதிய புற்றுநோய் சிகிச்சை மையத்தை திறந்து வைத்த அமைச்சர் .கே. என். நேரு!!
திருச்சி மாவட்டம்,திருச்சியில் காவேரி மருத்துவமனையின் ஒரு புதிய அங்கமாக புற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கும் அதிநவீன சிகிச்சை மையத்தை,நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் .கே. என். நேரு அவர்கள் திறந்து வைத்தார்.
நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கை அளிக்கும் விதமாக Kauvery Cancer Institute என்ற பெயரில் இம்மையத்தை நிறுவியுள்ள காவேரி மருத்துவமனை நிர்வாகத்திற்கு அமைச்சர்.கே. என். நேரு அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்த நிகழ்வில், மாநகராட்சி மேயர். அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர். வைரமணி, காவேரி மருத்துவமனை தலைவர் Dr. சந்திரகுமார், மருத்துவமனை இயக்குனர். Dr. மணிவண்ணன், செயல் இயக்குனர். Dr. செங்குட்டுவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.



கருத்துகள்
கருத்துரையிடுக