அரசு உறுதிமொழி குழுவின் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட அமராவதி, முருகையா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்த வேல்முருகன். எம். எல் .ஏ!!
திருவண்ணாமலை மாவட்டம்,அரசு உறுதிமொழிக் குழுவின் சார்பில் இன்றைய திருவண்ணாமலை மாவட்ட ஆய்வு பயணத்தின் போது அங்கு செயல்பட்டு வரும் அமராவதி முருகையா பெண்கள் மேல்நிலை பள்ளி ஆய்வு பயணத்தில் இடம் பெறாத போதும் அப்பள்ளியை பார்வையிட்டு பள்ளியின் சமையல் கூடம் தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்தும்
அங்கே உணவுக்காக இருப்பு வைக்கப்பட்டுள்ள காய்கறி உள்ளிட்ட சமையல் பொருட்களை பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு மாணவிகளிடம் அவர்களின் அடிப்படை தேவைகள் குறித்து கேட்டறிந்ததோடு கழிப்பிடம் உள்ளிட்ட பள்ளி வளாகத்தை தூய்மையாக பராமரிக்கவும் அறிவுறுத்தினார். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன். எம். எல். ஏ. இந்த நிகழ்வில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் ரமேஷ் குமார்.



கருத்துகள்
கருத்துரையிடுக