பனப்பாக்கம் அரசு தொடக்கப்பள்ளி அருகே மது அருந்தும் மது பிரியர்கள்!!
ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகில் மயூரா தியேட்டர் எதிரே ஊரான் என்ற காலி மனை உள்ளது இங்கு மது பிரியர்கள் தினமும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு மது பாட்டில்களை அங்கேயே வீசிவிட்டு சென்று விடுகின்றனர் இதனால் பாட்டில்கள் உடைந்து தூள் தூளாக காணப்படுகின்றன பள்ளிக்கு வரும் மாணவர்கள் அறியாமலே பாட்டில் துண்டுகளை மிதிக்கும் போதுகாலில் கால்களில் காயம் ஏற்படுகிறது இதனால் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சம்பந்தப்பட்ட நிர்வாகம் இதை சரி செய்யுமா? என பெற்றோர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கருத்துகள்
கருத்துரையிடுக