கரூர் அருகே பெரியசாமி நகரில் புதிய பைப் லைன் மற்றும் சின்டெக்ஸ் டேங்க் அமைக்கும் பணியை துவக்கி வைத்த முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி!!
கரூர் மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு .க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், கரூர் சட்டமன்ற தொகுதி, கரூர் மாநகராட்சி வார்டு எண் 31, திருப்பதி லே அவுட் மற்றும் பெரியசாமி நகர் பகுதிகளில், புதிய பைப் லைன் சின்டெக்ஸ் டேங்க் அமைக்கும் பணியை முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளரும் மான செந்தில் பாலாஜி அவர்கள் துவக்கி வைத்து நிகழ்ச்சியை சிறப்பித்தார்.இந்நிகழ்வில் கரூர் மாவட்ட ஆட்சியர்.மீ.தங்கவேல் இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.



கருத்துகள்
கருத்துரையிடுக