அரவக்குறிச்சி அருகே புகழூர் நாலு ரோடு பகுதிகளில் தார் சாலை அமைக்கும் பணி துவக்கி வைத்த முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி!!
கரூர் மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி, புகழூர் நகராட்சி வார்டு எண் 15, முருகம்பாளையம் கிழக்கு மற்றும் புகழூர் நாலு ரோடு பகுதிகளில் தார் சாலைகளை மேம்படுத்தும் பணிகளை முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் துவக்கி வைத்து நிகழ்ச்சியை சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் கரூர் மாவட்ட ஆட்சியர். மீ.தங்கவேல் இ.ஆ.ப., மாண்புமிகு அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர். இளங்கோ, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.


கருத்துகள்
கருத்துரையிடுக