கடலூர் அருகே குமாரகுடி வளைவு பாலத்திற்கு கீழே விபத்தில் சிக்கிய நபர்களை காப்பாற்றிய காவலர்களை பாராட்டிய ஜெயக்குமார். ஐ.பி.எஸ்!
கடலூர் மாவட்டம்,சேத்தியாத்தோப்பு 1.6.25 தேதி நேற்று இரவு சுரேஷ்குமார் வயது 25 த/பெ ஜெயக்குமார், சின்னநற்குனம் என்பவர் அவரது அம்மாவை இரு சக்கர வாகனத்தில் ஏற்றுக்கொண்டு குமாரகுடி வளைவு பாலத்தில் கீழே விழுந்து அடிபட்டு கிடந்த தகவல் கிடைத்தவுடன் காவல் ஆய்வாளர். சேதுபதி, உதவி ஆய்வாளர். மணிகண்டன்
காவல்துறை நெடுஞ்சாலை ரோந்து வாகன பணியில் இருந்த காவலர்கள். சபாபதி, இளங்கதிரவன் ஆகிய இருவரும் காயம்பட்ட நபர்களை உடனடியாக ரோந்து வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சேத்தியாத்தோப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து உதவி மேற்கொண்டனர். விபத்தில் அடிபட்டு கிடந்தவர்களை காவல் வாகனத்தில் ஏற்றி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க உதவிய காவல்துறையினரை காவல் கண்காணிப்பாளர்.S. ஜெயக்குமார் IPS அவர்கள் பாராட்டினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக