நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் மக்களுடன் முதல்வர் முகாம்!
கடலூர் மாவட்டம்,மக்கள் நேரில் மனுக்களை வழங்கும் அரிய வாய்ப்பு அமைந்த மக்களுடன் முதல்வர் முகாம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன் அவர்கள்,மாவட்ட ஆட்சித் தலைவர். சிபி. ஆதித்யா செந்தில்குமார் அவர்களுடன் 1000-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டு, 450-க்கும் மேற்பட்ட பயனாளர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கினோம்.விழாவை நிறைவு செய்ய 1000+ பொதுமக்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
நிகழ்வில் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் சபா. பாலமுருகன்,BDO-க்கள்,பண்ருட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமார்,மற்றும் கழக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், பயனாளர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.




கருத்துகள்
கருத்துரையிடுக