பசுமைத்தாயகம் மாநிலத் தலைவர். சௌமியா அன்புமணி பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம்!!
கடலூர் மாவட்டம்,பண்ருட்டியில் பசுமைத்தாயகம் மாநிலத் தலைவர் சௌமியா அன்புமணி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம்!திருவதிகை அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பெரியநாயகி சமேத வீரட்டானேஸ்வரர் திருக்கோவில் அர்ச்சகர்கள் சீனிவாசன் கல்யாண சிவம் ஆகியோர் சௌமியா அன்புமணிக்கு பூரண கும்ப மரியாதை செய்தனர்.
அதனைத் தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்த அவர் பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகளுடன் போட்டோ எடுத்துக் கொண்டார்.இதில் டைரக்டரும் நடிகருமான தங்கர் பச்சான்,மாவட்ட செயலாளர்கள் ரவிச்சந்திரன், முத்துகிருஷ்ணன் மற்றும் பண்ருட்டி நகர செயலாளர் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் பாமக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.



கருத்துகள்
கருத்துரையிடுக