பண்ருட்டி போக்குவரத்து காவல்துறை சார்பில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற சாலை பாதுகாப்பு பேரணி!!
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார். ஐ.பி.எஸ் அவர்களின் உத்தரவின் பேரில் பண்ருட்டி துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வழிகாட்டுதலின் பேரிலும் பண்ருட்டி போக்குவரத்து ஆய்வாளர்.பரமேஷ்வர பத்மநாபன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் முரளி,செந்தில்குமார் தேவநாதன், மற்றும் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலையில் பண்ருட்டி நகரம் விபத்தில்லா நகரமாக மாற்றிடவும் பள்ளி மாணவர்களுக்கும்
பொதுமக்களுக்கும் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பண்ருட்டி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியின் தேசிய மாணவர் படை (NCC), நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்(NSS), சாரணர் இயக்கம் (Scoute ), இளநிலை செஞ்சிலுவை சங்க மாணவர்கள் (JRC) உடன் இணைந்து சாலை பாதுகாப்பு பேரணி நடைபெற்றது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.




கருத்துகள்
கருத்துரையிடுக