ராணிப்பேட்டை நடைபெற்ற அருள்மிகு ஓம் ஸ்ரீ சப்த கன்னிகள் ஆலய கும்பாபிஷேக விழா!!


 ராணிப்பேட்டை மாவட்டம். செட்டி தாங்கள் பஞ்சாயத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஓம் ஸ்ரீ ராஜ முனீஸ்வரர் மற்றும் அருள்மிகு ஓம் ஸ்ரீ சப்த கன்னிகள் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

 இதில் மங்கல இசை வேத பாராயணம், விநாயகர் பூஜை, மகா கணபதி லக்ஷ்மி நவகிரக ஹோமங்கள், கோ பூஜை, புதிய சிலைகளுக்கு கண் திறத்தல் வைபவம், மகா பூர்ணாஹீதி தீபாராதனை, தொடர்ந்து கரிகோல ஊர்வலம், வீதி உலா வருதல், முதல் காலை யாக பூஜைகள், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குரார் பணம் ஆராதனை கலச புறப்பாடு, பூஜைகள் நடைபெற்று கும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது.

 

இவ்விழாவில் சுப்பிரமணி நாட்டாமை, வெள்ளை நாட்டாமை வளர்மதி அன்பழகன் ஊராட்சி மன்ற தலைவர் பரிமளா தியாகராஜன் ஒன்றிய குழு உறுப்பினர்  ஆகியோர் தலைமை வகித்தனர்.சந்திரசேகர் முன்னால் ஊராட்சி மன்ற தலைவர்,புலவர் சுப்பிரமணியம் முன்னாள் ஒன்றிய துணை பெருந்தலைவர்,துரை ஊராட்சி மன்ற துணைத் தலைவர், அருணகிரி, சரவணன் ஆகியோர் வரவேற்றனர்.

கும்பாபிஷேகத்தை தலைமை தாங்கி நடத்துபவர்கள்,ஸ்ரீ ராஜிவ் சிவம் குருஜி,கோவில் கட்டிய ஸ்தபதி தங்க ராஜா, கணேசன் குருசாமி மற்றும் ஆலய நிர்வாகிகள் செட்டி தாங்கள் பொதுமக்கள் பங்கேற்றனர்.ஆலய நிர்வாகம் தியாகராஜன் ஆகியோர் சிறப்பாக நடத்தினார்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!