கடலூர் சில்வர் பீச்சில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கிருஷ்ணசுவாமி வித்யாநிகேதன் பள்ளிமாணவர்களின் யோகா நிகழ்ச்சி!!
கடலூர் மாவட்டம்,சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, கிருஷ்ணசுவாமி வித்யாநிகேதன் பள்ளி மாணவர்கள் ஜூன் 21ஆம் தேதி கடலூர் சில்வர் பீச்சில் காலை 6 மணியளவில் யோகா நிகழ்ச்சியை சிறப்பாகக் கொண்டாடினர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக Dr. யமுனா கலந்து கொண்டு யோகாவின் முக்கியத்துவத்தைப் பற்றி உரையாற்றினார். பள்ளியின் முதல்வர் பத்மஸ்ரீ ராஜகோபாலன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளர் ரொமிலா. யோகா ஆசிரியர் கல்பனா மற்றும்
மாணவர்கள் பல்வேறு யோகாசனங்கள், மூச்சுப் பயிற்சிகள் மற்றும் தியானத்தில் ஈடுபட்டு, உடல் மற்றும் மன நலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பெற்றோர்களும் உற்சாகமாக பங்கேற்றனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.



கருத்துகள்
கருத்துரையிடுக