வாலாஜாபாத் அருகே புரசை செல்லும் சாலையில் பள்ளி பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து!!
காஞ்சிபுரம் மாவட்டம்,வாலாஜாபாத் ஒன்றியம், புள்ளலூரில் இருந்து புரிசை செல்லும் சாலையில், பள்ளி பேருந்தும், தனியார் நிறுவன ஊழியர்களை அழைத்து வந்த பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காயமடைந்த பள்ளி மாணவர்களும், தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களும் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களை காஞ்சிபுரம் C.V.M.P. எழிலரசன் MLA அவர்கள் நேரில் சந்தித்து, சிகிச்சை நிலை குறித்து ஆய்வு செய்தார்.
மருத்துவர்களிடம், மாணவர்களுக்கும் ஊழியர்களுக்கும் வழங்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்து, அவர்கள் தேவையான சிகிச்சைகளை விரைவாக அளிக்குமாறு கேட்டுக்கொண்டோம். மேலும், மேற்கொள்ள வேண்டிய ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகளுக்காக குறைந்தபட்ச கட்டணம்கூட வசூலிக்காமல் செய்து தர வேண்டும் என்று எழிலரசன் .எம். எல். ஏ அவர்கள் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.


கருத்துகள்
கருத்துரையிடுக