திருப்பூர் மாநகராட்சியில் கூட்டுறவுத் துறையின் சார்பில் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லரை விற்பனை நிலையத்தில் திறந்து வைத்த அமைச்சர்.மு.பெ. சாமிநாதன்!!
திருப்பூர் மாவட்டம்,திருப்பூர் மாநகராட்சி, மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் கூட்டுறவுத்துறையின் சார்பில் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லரை விற்பனை நிலையத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் விளம்பர துறை அமைச்சர். மு. பெ. சாமிநாதன் அவர்கள் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் மனித வள மேலாண்மைத்துறைஅமைச்சர்.என்.கயல்விழி செல்வராஜ் அவர்கள், துணை மேயர்.ரா.பாலசுப்பிரமணியம் அவர்கள், திருப்பூர்மாநகராட்சி4ம்மண்டலத்தலைவர். இல.பத்மநாபன் அவர்கள், 3-ம் மண்டலத்தலைவர்.கோவிந்தசாமி அவர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் இதில் உடன் இருந்தனர்.
திருப்பூர் மாவட்ட செய்தியாளர் அருண் ராஜ்.



கருத்துகள்
கருத்துரையிடுக