சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர் பிரச்சாரம்!!
கடலூர் மாவட்டம்,சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டம் ஆவினங்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் போதை ஒழிப்பு சம்பந்தமாக ஆவினங்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். அதன் ஒரு பகுதியாக திட்டக்குடி காவல் நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணியில் நடத்தப்பட்டது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.



கருத்துகள்
கருத்துரையிடுக