சிதம்பரம் அருகே கிள்ளை: பெண்ணை தாக்கிய வாலிபர் கைது!!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த சி. முட்லூர் மனவெளி தெருவை சேர்ந்த கங்கா பாக்கியம் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிவக்குமாருக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி சிவக்குமார் கங்கா பாக்கியம் வீட்டிற்கு சென்று ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து கங்கா பாக்கியம் கொடுத்த புகாரின்பேரில் கிள்ளை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் தாமோதரன் வழக்குப் பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்தார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக