ராகுல் காந்தி பிறந்த நாள் விழா!காங்கிரஸ் நகர கமிட்டி சார்பில் அரக்கோணத்தில் கொண்டாட்டம்!!
இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் காங்கிரஸ் நகர கமிட்டியின் சார்பாக இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவர். ராகுல் காந்தியின் 52 ஆவது பிறந்தநாள் விழா! மிகச் சிறப்பாக கொண்டாடபட்டது. அரக்கோணம் நகர காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர். ஏ.எட்வின் ராஜன் இதற்கான ஏற்பாடுகளை கவனித்துதலைமைதாங்கினார்.அரக்கோணம் சட்டமன்ற பொறுப்பாளர். ஜி.எஸ் .மூர்த்தி முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் இளைஞர் காங்கிரசின்தேசியஒருங்கிணைப்பாளர். கே. நரேஷ் குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கேக் வெட்டி 500ற்கும் மேற்பட்டவர்களுக்கு கட்சி நிர்வாகிகள் அனைவருடன் இணைந்து அன்னதானத்தையும் வழங்கினார். நிர்வாகிகள் சந்திரன், புகழும் பொன்னையா பத்ரு நிஷா, தம்புராஜ், கோபிநாத், பாலச்சந்தர், விமல், டேவிட் பிரவீன் சதிஷ் லிங்கேஸ்வரன், அருண் உட்பட பலரும் திரளாக கலந்து கொண்டனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.




கருத்துகள்
கருத்துரையிடுக