அரக்கோணம் தசபுஜ பத்ரகாளி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற வைகாசி யாகம்!!
அரக்கோணம் ஜூன் 11
ராணிப்பேட்டை மாவட்டம் ,அரக்கோணம் பழனி பேட்டை அங்காளம்மன் ஆலயம் பின்புறத்தில் தசபுஜ பத்ரகாளி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் வைகாசி மாதம் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. மேலும் மழை வேண்டியும் மக்கள் தோஷங்கள் அகலவும் குழந்தை பாக்கியம் வேண்டுவோருக்காவும் கல்வி வேலை வாய்ப்புகள் எதிர்பார்ப்பு உடையவர்களுக்காகவும் நடத்தப்பட்டது. இதனை பூசாரி மணி ஏற்பாடுகள் செய்ய மணி சேகர் ஐயா யாகத்தை சிறப்பாக நடத்தினார். இதில் சிறப்பு அழைப்பாளராக மீனவர் சமுதாய காப்பாளர். செல்வம் மற்றும் கட்டிட பொறியாளர். இளையராஜா கலந்து கொண்டனர். யாகத்திற்கு பின் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது உடன் பூஜை ஏற்பாடுகளில் மகேஷ் ஈடுபட்டார்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக