ஏர் இந்தியா விமானம் விபத்து பாகிஸ்தானின் சதியே காரணம் அ இஜமக தலைவர். குற்றசாட்டு!!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தலைமை இடமாகக் கொண்டு அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி செயற்பட்டு வருகிறது இக்கட்சியின் நிறுவன தலைவர். டாக்டர். ஐசக். அய்யா. செய்தியாள்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியபோது நடந்த ஏர் இந்தியா விமான விபத்து பாகிஸ்தானின் சதியே காரணம் என குற்றம்சாட்டுகிறேன். ஏனெனில் கடந்த வாரங்களில் பாகிஸ்தானின் அனைத்து விமான தளங்களை இந்தியா அழித்தது இதனால் பழிவாங்கும் படலமாக இந்த விபத்து உருவாக்கபட்டு உள்ளது விமானம் முழு பரிசோதனைக்கு பின் புறப்பட்டதாக கூறப்படுகிறது ஆனால் புறப்பட்ட சில மணிதுளி நேரத்தில் இரண்டு இன்ஜினும் அடுத்தடுத்து பழுதாகி மருத்துவக் கல்லூரி விடுதி மீது விழுந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஆகவே விமானம் பரப்பதற்கு முன் முழு ஆய்வு அறிக்கை தயார் செய்ய வேண்டாமா? எனவே மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் உடனடியாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் இறந்தவர்களுக்கு காப்பீட்டு தொகையாக இரண்டு கோடி நிவாரணம் தர வேண்டும் மீண்டும் அரசே விமான சேவை எடுத்து நடத்த வேண்டும் இது போல் துப்பாகி கலாச்சாரம் நமது மாவட்டத்தில் பெருகி பாதுகாப்பற்ற நிலை உருவாகி வருகிறது. ஆகவே காவல் துறை வேகமாக செயல்பட வேண்டும் அனுமதி அளிப்பதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் ஆகவே குற்றங்களை தடுத்து உயிர்களை பாதுகாக்க வேண்டும் இவ்வாறு கூறினர்
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக