அரக்கோணம் கல்லூரியில் போதைப்பொருள் எதிர்ப்பு தினம்! குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு!!
அரக்கோணம் ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் தேசிய சேவைத் திட்டத்தின் (என்எஸ்எஸ்) கீழ் போதை இல்லாத் தமிழ்நாடு எனும் தலைப்பில் எதிர்ப்பு தினம்விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு கூட்டத்திற்கு கல்லூரி செயலாளர். டி.எஸ்.ரவிக்குமார் தலைமை தாங்கினார் 2025-26 ரோட்டரி சங்க தலைவர். மனோகர் பிரபு முன்னிலை வகித்தார்முதல்வர்.டி.கே.ஜெகநாதன்வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக காவல் துறை மாவட்ட துணை கண்காணிப்பாளர். ஒய். ஜாபர் சித்திக் கலந்து கொண்டார். அவர் பேசிய போது மாணவர்களிடையே ஒழுக்கம் மிகவும் அவசியம் எனெனில் உடல் ஆரோக்கியமே முக்கியமானது அதே நேரத்தில்கல்வியில் முன்னேற்றம் அடைய போதை பொருள் பழக்கத்திற்கு செல்லாமலும் இருக்க வேண்டும்.
இதனால் நாட்டிற்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மகிழ்ச்சியை தரும் இதன் மூலமும் தமிழ்நாட்டில் இருந்து முற்றிலுமாகத்தை போதை பொருள் பழக்கத்தை விரட்டி விடலாம் என பேசினார். நிகழ்ச்சியில் முன்னாள் ரோட்டரி சங்க தலைவர். மணிகண்டன் போதைப் பொருள் எதிர்ப்பு கிளப் ஒருங்கிணைப்பாளர்.
எஸ்.தமிழ் செல்வன் தேசிய திட்ட- ஒருங்கிணைப்பாளர். எம்.ஜெயகுமார் உட்பட திரளாக மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியினை பேராசிரியர். வீரமணி தொகுத்து வழங்கினார்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.




கருத்துகள்
கருத்துரையிடுக