ஆற்காட்டில் நடைபெற்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் 500க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா!!
ராணிப்பேட்டை மாவட்டம்,ராணிப்பேட்டை மாவட்டத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த திமுக, பாமக, யாதவர் சங்கம், வணிகர் சங்கம், சமத்துவ மக்கள் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு மாற்று கட்சிகளை சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்டோர் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட வணிகர் சங்கங்களின் தலைவர். பொன்.கு.சரவணன் சார்பில் மேற்கு மாவட்ட செயலாளர். எஸ்.எம்.சுகுமார் தலைமையில் அதிமுகவில் இணையும் விழா! நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு முன்னாள் அதிமுக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு அமைச்சர். K.C.வீரமணி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் அமைச்சர். சேவூர். ராமச்சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு அதிமுகவில் இணைத்து கொண்ட மாற்று கட்சியினரை வரவேற்று அதிமுக துண்டை அணிவித்து உற்சாகத்துடன் அதிமுகவில் இணைத்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். V.K.R.சீனிவாசன், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை துணைச்செயலாளர். பெல். தமிழரசன், எம்ஜிஆர் இளைஞரணி மாவட்ட செயலாளர். சுமைதாங்கி ஏழுமலை, மாவட்ட துணைச்செயலாளர். வேதகிரி, நகர செயலாளர்கள் ஜும் சங்கர், W.G.மோகன், K.P.சந்தோஷம், பிற அணி மாவட்ட நிர்வாகிகள் ஏழில்அரசன், உமர்பாரூக், ராதிகா, விஜய்ஆனந்த் உள்ளிட்ட நகர ஒன்றிய பேரூர் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.






கருத்துகள்
கருத்துரையிடுக