கரூர் அருகே லாலாபேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி ரூ .45 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டும் பணியை துவக்கி வைத்த முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி!!



கரூர் மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின்  அவர்களின் வழிகாட்டுதலில், கரூர் மாவட்டம், லாலாபேட்டை அரசு மேல் நிலைப் பள்ளியில், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து (2025-2026) ரூ.45.00 லட்சம் மதிப்பீட்டில், கூடுதல் வகுப்பறையில் கட்டும் பணியை மாண்புமிகு பெரம்பலூர் மக்களவை உறுப்பினர். கே.என்.அருண் நேரு அவர்கள், மாண்புமிகு குளித்தலை சட்டமன்ற உறுப்பினர். இரா. மாணிக்கம் அவர்களுடன் முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் இணைந்து நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்பித்தார். 


இந்நிகழ்வில் கரூர் மாவட்ட ஆட்சியர் .மீ.தங்கவேல் இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.

கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!