அரக்கோணம் நகரத்தில் நடைபெற்ற கோவிந்தசாமி நினைவு கண் சிகிச்சை முகாம்! 300பேர் பயனடைந்தனர்!!
இராணிப்பேட்டை மாவட்டம், பார்வை இழப்பு தடுப்பு சங்கம்கோயம்புத்தூர் சங்கராகண்மருத்துவமையம்ஆகியோருடன் அரக்கோணம் சந்திப்பு லயன்ஸ் சங்கம் இணைந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கான273 வது மாத. இலவச கண் சிகிச்சை முகாமிற்குஆளுநர். ரவி தலைமை தாங்கினார்.மற்றொரு மு. ஆளுநர். அருண்குமார் முகாமைதுவக்கி வைத்தார். அன்னதானத்தை மு.ஆளுநர் அரிதாஸ் துவக்கி வைத்தார்.தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் அரக்கோணம் சந்திப்பு லயன்ஸ் சங்க கட்டிடத்தில் நடந்த முகாமில் 300ற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதற்காக
லயன்ஸ் சங்க முன்னாள் தலைவர். குருவராஜப்பேட்டைவிஸ்வநாதன் அவரது தந்தையார் தெய்வத்திரு. எம். எஸ். கோவிந்தசாமி நினைவாக ஏற்பாடுகளை கவனித்து கொண்டார். மேலும் லையன் சங்க நிர்வாகிகள். ஆறுமுகம், வெங்கட், நரசிம்மன், குமார், வேலவன், ராமு, முனிரத்தினம், ஜெகதீசன், சுந்தரமூர்த்தி, அப்துல் கான் அடுத்த ஆண்டு தலைவர். உதயகுமார் மற்றும் யுவராஜ், சதீஷ் உட்பட தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர். மோகன் காந்தி மாநில இணை செயலாளர். ஆறுமுகம் தலைமை பேச்சாளர். பாலகிருஷ்ணன்,அசோக், சரண்குமார் மாவட்ட செயலாளர். கஜேந்திரன் உட்பட பலரும் முகாம் பணிகளில் ஈடுபட்டனர். இறுதியில் சங்கத் தலைவர். மணிவண்ணன் நன்றி கூறினார்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.






கருத்துகள்
கருத்துரையிடுக