பண்ருட்டியில் ஐந்து டன் ரேஷன் அரிசி மற்றும் 250 கிலோ கோதுமை 500 கிலோ சர்க்கரை, மண்ணெண்ணெய் பறிமுதலால் பரபரப்பு!!
கடலூர் மாவட்டம் கந்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் சரவணன் வயது 48 இவர் பண்ருட்டி கும்பகோணம் சாலையில் மளிகை கடை நடத்தி வந்த நிலையில் பண்ருட்டி திருநகர் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில்
மாவட்ட வழங்கல் குமாரராஜா உத்தரவின் பேரில் மாவட்ட பறக்கும் படை தாசில்தார் ராஜேஷ்பாபு பண்ருட்டி வட்ட வழங்கல் தாசில்தார் சிவக்குமார் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் தலைமையிலான குழு அதிரடியாக சோதனை செய்ததில் ஐந்து டன் ரேஷன் அரிசி மற்றும் 250 கிலோ கோதுமை 500 கிலோ சர்க்கரை மேலும் அவரிடம் விசாரணை செய்ததில் சரவணன் நடத்தி வந்த மளிகை கடையில் சோதனையிட்டதில் கோதுமை மற்றும் கேன் கேனாக மன்னனை பறிமுதல் செய்யப்பட்டது மேலும் இது குறித்து தொடர் ஒருவரை கைது செய்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக