விழுப்புரம் அருகே வீரபாண்டி ஊராட்சியில் 20 வருடங்களுக்குப் பிறகு தூர்வாரப்படும் குளம்!!
விழுப்புரம் மாவட்டம் மனம்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு உட்பட்ட வீரப்பாண்டி ஊராட்சி டாக்டர்.அம்பேத்கர் நகர் குடியிருப்பில் சுமார் 20 வருடத்திற்கு மேலாக சேறும்,சகதி,குப்பை,கூலமாக துர்நாற்றம் வீசப்பட்டு தூர்வாரப்படாத நிலையில் கிடப்பில் போடப்பட்டிருந்த குளம் ஊராட்சி மன்ற தலைவர் அறிவுறுத்தலின் பேரில் 4 மற்றும் 5 வது வார்டு உறுப்பினர்கள் கூலி ஆட்கள்,ஜே சி பி இயந்திரம் மூலம் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்

கருத்துகள்
கருத்துரையிடுக