விழுப்புரம் அருகே வீரப்பாண்டி கிராமத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற ஸ்ரீ வள்ளி தெய்வானை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம்!!
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், வீரப்பாண்டி கிராமம் பெரியபாறையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமண்ய சுவாமி ஸ்ரீமுத்துமாரியம்மன், ஸ்ரீ ஓம் சக்தி ஆலய மஹா கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்கு பிறகு வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா என கோஷம் எழுப்பினர். கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்


கருத்துகள்
கருத்துரையிடுக