கோவையில் திமுக சட்டத்துறை சார்பில் கலைஞரின் 102 வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் 102 இளம் வழக்கறிஞர்களை கோவை வழக்கறிஞர் சங்கத்தில் உறுப்பினராக சேர்க்கும் நிகழ்ச்சி! முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி பங்கேற்பு!!
கோவை மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு .க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், திமுக சட்டத்துறை மற்றும் முத்தமிழறிஞர் வழக்கறிஞர் பாசறை சார்பில்,டாக்டர். கலைஞர் அவர்களின் 102வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில், 102 இளம் வழக்கறிஞர்களை கோவை வழக்கறிஞர் சங்கத்தில் உறுப்பினராக சேர்த்தல், வழக்கறிஞர் சேம நிதி வழங்குதல், காப்பீட்டு நிதி வழங்குதல் மற்றும் சட்டம் நூல்கள் வழங்கும் விழா!
இன்று கோவையில், கழக மாநிலங்கவை உறுப்பினர் - கழக சட்டத்துறைச் செயலாளர்.என்.ஆர். இளங்கோ அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சி சிறப்பித்தார்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.




கருத்துகள்
கருத்துரையிடுக