கடலூர் அரசு மருத்துவமனையில் சாயநீர் கழிவுத்தொட்டி உடைப்பு ஏற்பட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த அமைச்சர் சி.வெ கணேசன்!
கடலூர் மாவட்டம் கடலூர், குடிகாடு கிராமத்தில் இயங்கி வரும் பேப்ரிக்ஸ் கம்பெனியில் சாயநீர் கழிவுத்தொட்டி உடைப்பு ஏற்பட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேற்று (15.05.2025) தொழிலாளர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ கணேசன் அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
உடன் மாவட்ட ஆட்சித்தலைவர். சிபி ஆதித்யா செந்தில்குமார் இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் இ.கா.ப., உடன் இருந்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்


கருத்துகள்
கருத்துரையிடுக