திருச்சியில் நடைபெற்ற ஜெட்லி புக் ரெக்கார்ட் ஸ் உலக சாதனை நிகழ்ச்சியில் சாதனை படைத்தவர்களை பாராட்டிய முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி!
திருச்சி மாவட்டம்,ஜெட்லி புக் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.. இதில் கரூரைச் சார்ந்த வரலாற்று ஆய்வாளர்கள் திரு. மணி, திருமதி. மைதிலி அவர்களின் புதல்விகள் செல்வி ம.மிதிலா அவர்கள் (8 வயது), 35 வினாடிகளில் தமிழின் பழைய எழுத்துரு எழுத்துக்கள் 52 எழுதி உலக சாதனை படைத்தார்.. அவரது தங்கை செல்வி ஜெகதி மகதி அவர்கள் (6 வயது), 35 வினாடிகளில் திருக்குறளில் உள்ள உதடு ஒட்டாத 20 குறள்களை கூறி உலக சாதனை படைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன்,இரு மழலை செல்வங்களையும் முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் பாராட்டி பரிசளித்தார்.
திருச்சி மாவட்ட செய்தியாளர் சக்தி வேல்.


கருத்துகள்
கருத்துரையிடுக