கரூரில் தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை வழங்கும் விழா முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்பு!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு, கரூர் மாவட்ட தி.மு.க அமைப்புசாரா ஓட்டுநர் அணி சார்பில், கரூர் தொகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை வழங்கும் விழா கரூர் திரு.வி.க சாலையில் உள்ள T.Vசரஸ்வதி மஹாலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட செயலாளருமான. செந்தில் பாலாஜி அவர்கள் கலந்து கொண்டு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை வழங்கி சிறப்பித்தார்.
இந்த நிகழ்வில் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், தொண்டர்கள் மற்றும் ஏராளமான ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்



கருத்துகள்
கருத்துரையிடுக