சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாடு பாதுகாப்பு குறித்து கடலூர் பாமக கட்சி நிர்வாகிகளுடன் ஜெயக்குமார் ஐபிஎஸ் ஆலோசனை!
கடலூர் மாவட்டம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார் IPS அவர்கள் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வரும் 11.5.2025 அன்று சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாட்டிற்கு கடலூர் மாவட்டத்திலிருந்து செல்பவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி மாநில மற்றும் மாவட்ட பிரதிநிதிகளிடம் விளக்கி கூறினார். மேலும் காவல்துறையினரின் வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்

கருத்துகள்
கருத்துரையிடுக