ராஜபாளையம் அருகே இளந்திரைகொண்டான் ஊராட்சியில் புதிய நியாய விலைக் கடையில் விற்பனையை தொடங்கி வைத்த தங்கபாண்டியன் எம்எல்ஏ!
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் தொகுதியில்அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் – II (2024-2025) கீழ் இளந்திரைகொண்டான் ஊராட்சியில் அமைக்கப்பட்ட நியாய விலைக்கடை MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார்.
மேலும் இந்நிகழ்வில் பேசிய MLA அவர்கள், இந்த நிதியாண்டில் இராஜபாளையம் தொகுதியில் புதியதாக 10 நியாய விலைக்கடை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து விரைவில் பூமி பூஜை நடைபெறவுள்ளது என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர். கனகராஜ், கிளர்க். சீனிவாசன், ஒன்றிய துணை செயலாளர். மலர்மன்னன், மாணவரணி. அஜீத்குமார், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.




கருத்துகள்
கருத்துரையிடுக