அரியலூர் அருகே ஓட்டக்கோவில் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர் சி.வெ. கணேசன்!
அரியலூர் சட்டமன்றத் தொகுதி, அரியலூர் ஒன்றியம், ஓட்டக்கோவில் ஊராட்சியில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தின் மூன்றாம் கட்ட சிறப்பு முகாமினை, மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ கணேசன் அவர்கள் துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
உடன் மாவட்ட ஆட்சித் தலைவர், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, அரசு அலுவலர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



கருத்துகள்
கருத்துரையிடுக