பண்ருட்டி நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு சீருடை, ரிப்லக்ஷன் ஜாக்கெட், கையுறை, கேப் மற்றும் விசில்கள் வழங்கிய நகர மன்ற தலைவர் க. ராஜேந்திரன்!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு இன்று 16.5.2025 பண்ருட்டி நகர மன்ற தலைவர் நகர கழக செயலாளர் க. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் பண்ருட்டி நகராட்சி ஆணையாளர் பொறுப்பு கண்ணன் சுகாதார அலுவலர் முருகேசன் முன்னிலையில் ஸ்ரீ சாய் இண்டஸ்ட்ரி உரிமையாளர் செந்தில் கலந்துகொண்டு தூய்மை
பணியாளர்களுக்கு சீருடை ரிப்லக்ஷன் ஜாக்கெட் கையுறை கேப் மற்றும் விசில்கள் வழங்கப்பட்டு பண்ருட்டி நகரத்தை தூய்மையாக சுத்தமாகவும் வைத்துக் கொள்ளவும் குப்பைகளை தரம் பிரித்து அதற்குரிய இடத்தில் ஒப்படைக்கவும் மேற்கண்ட பணிகளை தொய்வின்றி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது உடன் துப்புரவு மேற்பார்வையாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உடன் இருந்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்



கருத்துகள்
கருத்துரையிடுக