விழுப்புரம் அருகே பம்பை ஆற்றின் வடகரையில் சங்க கால தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான்!
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், தென்னமாதேவி அயனாம்பாளையம் கிராமங்களில் பம்பை ஆற்றின் வடகறையில் சங்க காலதொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளும் பொருட்டு, கண்டறியப்பட்ட தொல்லியல் பொருட்களைமாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் அ.சிவா
முன்னிலையில் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர்ம.ஜெயச்சந்திரன்,தமிழ்நாடு தொல்லியல் துறை இணை இயக்குநர் முனைவர் சிவானந்தம், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் உட்பட பலர் உள்ளனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்


கருத்துகள்
கருத்துரையிடுக