பண்ருட்டியில் மே தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி தமிழக கட்டிட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்ச்சி!
பண்ருட்டி மே தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி தமிழக கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கம் அமைப்பு சாரா தொழிலாளர்கள் மத்திய சங்கம் சார்பில் மே தின கொடியேற்று விழா இன்று 1.5.2025 பண்ருட்டி தட்டாஞ்சாவடி அலுவலகத்தில் கட்டிட தொழிலாளர்கள் நல வாரிய மாநில பொதுச் செயலாளர் சுப்பராயலூ அவர்கள் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக பண்ருட்டி நகர மன்ற தலைவர் நகர கழக செயலாளர் க. இராஜேந்திரன் அவர்கள் கலந்துகொண்டு கொடியேற்றி தொழிலாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட மண்டல தலைவர் சண்முகம் அரசியல் கட்சி பிரமுகர்கள் கட்டிட தொழிலாளர்கள் சங்க உறுப்பினர்கள் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு மே தின விழா சிறப்பாக நடைபெற்றது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்


கருத்துகள்
கருத்துரையிடுக