கடலூர் மாவட்ட காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து காவல்துறையினரிடம் ஜெயக்குமார் ஐபிஎஸ் ஆலோசனை!
கடலூர் மாவட்டம் கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார் IPS அவர்கள், கடலூர் மாவட்டம் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள விசாரணை வழக்கு கோப்புகள், நிலுவையில் இருப்பதற்கான காரணம் என்ன என விசாரணை மேற்கொண்டார்.
பின்னர் சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரிகள் விரைவாக விசாரணை முடித்து நீதிமன்ற கோப்புக்கு எடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என காவல் நிலையங்களில் விசாரணை மேற்கொள்ளும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள், மற்றும் தலைமை காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர். கோடீஸ்வரன், துணை காவல் கண்காணிப்பாளர். சார்லஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்


கருத்துகள்
கருத்துரையிடுக