விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கம் ஊராட்சியில் மகளிர் சுய உதவிக் குழுவால் தயாரிக்குப்படும் கரும்பு நாற்றங்காலினை மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் சென்று ஆய்வு!
விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் ஊராட்சியில் மகளிர் சுய உதவிக் குழுவால் தயாரிக்கப்படும் கரும்பு நாற்றங்காலினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து, கோலியனூர் ஊராட்சி ஒன்றியம், அய்யங்கோவில்பட்டு ஊராட்சி, முத்தாம்பாளையம் ஏரியினை தூர்வாரி மேம்படுத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் நீர்வளத்துறை உதவி பொறியாளர் கார்த்தி உட்பட பலர் உள்ளனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்


கருத்துகள்
கருத்துரையிடுக