ஆவினங்குடி அருகே அரசு பேருந்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த உதவி ஆய்வாளர். சுந்தரமூர்த்தி உடலுக்கு ஜெயக்குமார் ஐபிஎஸ் நேரில் சென்று அஞ்சலி!
கடலூர் மாவட்டம் ஆவினங்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர். சுந்தரமூர்த்தி அரசு பேருந்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.தொடர்ந்து துணை காவல் கண்காணிப்பாளர்கள். லாமேக், மோகன், காவல் ஆய்வாளர். அருள்வடிவழகன், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் அஞ்சலி செலுத்தினார்கள் .
பின்னர் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அரசால் வழங்கப்படும் உதவித்தொகை ரூபாய் 1 லட்சம் அவரது குடும்பத்தாருக்கு வழங்கி ஆறுதல் கூறினார் .
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்


கருத்துகள்
கருத்துரையிடுக