அரக்கோணம் அருகே எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழா! சு ரவி. எம்.எல்.ஏ பங்கேற்பு!!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே மங்கம்மா பேட்டை பார்வை யற்றோர் விடுதி உள்ளது இங்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் 71 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்திற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர்.
பி ஏ .பாலு ஏற்பாடு செய்து தலைமை வகித்தார் இளைஞரணி ஒன்றிய செயலாளர்கள். வழக்கறிஞர். பிரகதீஷ்வரன் பிரசாந்த மற்றும் மாவட்டம் பிரசாத் முன்னிலை வகித்தனர் ஒன்றிய மாணவரணி செயலாளர். டி .எம். சத்தியநாராயணன் வரவேற்றார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினருமான சு.ரவி எம்எல்ஏ அவர்கள் கலந்து கொண்டு பார்வை யற்றவாகளுக்கு நல திட்டஉதவிகளை வழங்கி கேக் வெட்டி நிகழ்ச்சியை சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர். மீனா ரகுபதி மாவட்ட தகவல் தொழிற் நுற்ப தலைவர்.ஆர். அரிகரன் மாவட்ட வர்த்தக அணி செயலாளர்.தேவன் ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞாணி செயலாளர். பால்ராஜ் மற்றும் கீழ்குப்பம் வார்டு உறுப்பினர். ஜான்விக்டர், மேல்பாக்கம் சுரேஷ், தண்டலம் அமுல்ராஜ் வழக்கறிஞர்கள். திருமலை, யோகனந்த் பாலா மற்றும் ஜி. மோகன், ஹேமந்த் குமார், இச்சி புத்தூர் வருண், எம்பி .சோமசுந்தரம் ஜெ எஸ் ராம்குமார் அண்ணா தொழிற்சங்க பேரவை மாவட்ட தலைவர். குமார், நகர செயலாளர். தம்பி முருகேசன், உள்ளிட்ட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.



கருத்துகள்
கருத்துரையிடுக