கரூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி பங்கேற்பு!
கரூர் மாவட்டம் எளிய மக்களுக்கு என்றும் உரியவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், கரூர் மாவட்டம், கரூர் வடக்கு பகுதி கழகத்தின் சார்பில் வெங்கமேடு அண்ணா சிலை அருகில், திராவிட மாடல் நல்லாட்சியின் நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட செயலாளரும், கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான. செந்தில் அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தலைமை கழக பேச்சாளர். திருப்பூர் ம. சல்மான் சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில், கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், தொண்டர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்


கருத்துகள்
கருத்துரையிடுக