பண்ருட்டியில் திருவதிகை பாவாடைப் பிள்ளை உயர்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் காட்டும் பணி நேரில் சென்று பார்வையிட்ட நகர மன்ற தலைவர். க. ராஜேந்திரன்!
கடலூர் மாவட்டம்,பண்ருட்டி நகராட்சிக்குட்பட்ட திருவதிகை பாவாடைப்பிள்ளை உயர்நிலை பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது இன்று 28.5.2025 பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுக கழக செயலாளருமான க.இராஜேந்திரன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டு ஆசிரியர் பெருமக்களிடம் பள்ளியில் குறைபாடுகளை கேட்டு அறிந்தார்.
உடன் மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர். கதிர்காமன் நகர அவை தலைவர். ராஜா நகர துணை செயலாளர்.கௌரி அன்பழகன் மாவட்ட பிரதிநிதி பிரபு நகர மன்ற உறுப்பினர். கிருஷ்ணராஜ் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் உடன் இருந்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.



கருத்துகள்
கருத்துரையிடுக