பண்ருட்டி திருக்கோயில்களில் நடைபெறும் ஊழல் முறைகேடு குறித்து விசாரணை வேண்டி கோரிக்கை விடுத்த பண்ருட்டி வட்ட பொதுநல அமைப்பினர்!
கடலூர் மாவட்டம்,பண்ருட்டி திருக்கோயில்களில் நடைபெறும் ஊழல் - முறைகேடு குறித்து தொடர் விசாரணைகள் - போராட்டங்களை, பண்ருட்டி வட்ட பொது நல அமைப்பினர் நடத்தி வரும் சூழலில், எதிர்வரும் 21.5.25 ம் தேதி , சென்னை, அறநிலைய துறை ஆணையர் அலுவலகம் முன், போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்கிடையில், இன்று மாலை 5 மணிக்கு, அறநிலைய துறை ஆணையர். ஸ்ரீதரன், கூடுதல் ஆணையர்கள் . டாக்டர் பழனி, திருமதி திருமகள், ஆகியோருடன், பொது நல அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டு, கோரிக்கைகள் குறித்து ஒவ்வொன்றாக விவாதித்து, 2 வாரத்திற்குள் தீர்வு காண உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர் ஆகையால் 21 ஆம் தேதி நடைபெற இருக்கின்ற போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.



கருத்துகள்
கருத்துரையிடுக