திருநெல்வேலி பகுதியில் கோடை மழையின் காரணமாக மின்கம்பம் சாய்ந்து மின்தடை ஏற்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர். சிவசங்கர்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் நேற்று முன்தினம் பெய்த காற்றுடன் கூடிய திடீர் கோடை கன மழையின் காரணமாக மின் கம்பங்கள் சாய்ந்து மின் தடை ஏற்பட்டதை தொடர்ந்து, மேலப்பாளையம் ரோஸ் நகர் பகுதியில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளை போக்குவரத்துத்துறை மற்றும் மின்துறை அமைச்சர். சிவசங்கர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு இரா.சுகுமார் இ.ஆ.ப, மாநகராட்சி ஆணையாளர் மரு என்.ஓ.சுகபுத்தரா இ.ஆ.ப, திருநெல்வேலி மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர். லதா, மேற்பார்வை பொறியாளர். அகிலாண்டேஸ்வரி, செயற்பொறியாளர். வெங்கடேஷ் மணி, செயற்பொறியாளர். ஜெயசீலன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள், முன்னாள் அமைச்சர் மாமா மைதீன் கான் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


கருத்துகள்
கருத்துரையிடுக